நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பினாங்கு மாநில மக்களைச் சந்தித்தார் பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன்

ஜோர்ஜ்டவுன்: 

பினாங்கு மாநிலத்தில் பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் கடந்த  ஜனவரி 3ஆம் தேதி பினாங்கு லிட்டில் இந்தியாவில் பிரம்மாண்டமாக மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பாடகர் ஹரிஹரன் கலந்துக்கொண்டார். 

இந்த கூட்டமானது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் நடைபெற்று முடிந்தது. எதிர்வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறவுள்ள பாடகர் ஹரிஹரன் கலை நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த சந்திப்பை  திரு சிவமணி அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.பாடகர் ஹரிஹரன் அவர்களும் மக்களை சந்தித்து இரண்டு பாடல்களை பாடி மக்களை சந்தோஷப்படுத்தினார்.  நிகழ்ச்சியைச்  சிறப்பாக திரு. கவிமாறன் வழிநடத்தினார்,

இந்நிகழ்ச்சிக்கு பினாங்கு வர்த்தக சங்கத் தலைவர் Dato பார்த்திபன், காரசாரம் உணவக உரிமையாளர் திரு ஸ்ரீதரன், Kedah மாநிலக்கத் தலைவர் Dato ஆனந்தன் மற்றும் பல பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காரசாரத்தில் உணவகத்தில் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

-தயாளன் சண்முகம் 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset