செய்திகள் மலேசியா
நிலம், மனை உரிமையாளர்களுக்குக் காலாவதியான அபராதத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படும்
பெட்டாலிங் ஜெயா:
பினாங்கு மாநில அரசு, நிலம் மற்றும் மனை உரிமையாளர்கள் தங்கள் காலதாமதமான அபராதத் தொகையை ஒரு முறை மொத்தமாகச் செலுத்தும் வகையில் 50% தள்ளுபடியை வழங்குகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த மாநில அரசாங்கக் கூட்டத்தில் இந்தத் தள்ளுபடி அங்கீகரிக்கப்பட்டது என்றும், மே 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் பினாங்கு மாநில முதல்வர் சௌ கோன் இயோவ்.
இந்த முயற்சியானது நிலம், மனை உரிமையாளர்கள் தங்கள் வரிகளைச் செலுத்த ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
நிலம் மற்றும் மாவட்ட அலுவலகத்திலோ இணையத்தில் PgLAND அகப்பக்கத்திலோ வரியைச் செலுத்தலாம்.
கூடுதலாக, அபராத அறிவிப்பு 6A (நில வரி) அல்லது அபராத அறிவிப்பு 11 (சதி வரி) பெறும் வரி செலுத்துவோருக்கு இது பொருந்தும்.
எவ்வாறாயினும், இந்தச் சலுகைக்கான நடைமுறையான தேதியான ஜனவரி 2-க்கு முன் செலுத்தப்பட்ட தவணைகள் அல்லது தாமதமான அபராதங்களுக்கு இது பொருந்தாது என்றும் சோ கூறினார்.
பினாங்கிலுள்ள நில உரிமையாளர்களை பினாங்கின் தேசிய நிலக் குறியீட்டின் கீழ் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நில வரியைச் செலுத்த ஊக்குவிக்க தேவையான முன்முயற்சிகளைச் செயல்படுத்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு மே 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு?
May 2, 2024, 1:22 pm
42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம்
May 2, 2024, 1:00 pm