நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

PADU முதன்மை  தரவுத் தளத்தில் இதுவரை 2 லட்சம் பேர் பதிவு: ரபிசி

புத்ராஜெயா:

அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள PADU பாடு முதன்மை தரவுத் தளத்தில் இதுவரை 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இதனை உறுதிப்படுத்தினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பாடு எனப்படும் முதன்மை தரவுத் தளத்தை அறிமுகம் செய்தார்.

இந்த தளத்தில் பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அறிமுகம் செய்யப்பட்ட பின் இதுபோன்ற பிரச்சினைகள் எழுந்தது. ஆனால் அப் பிரச்சினைகளை அனைத்தும் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டது.

இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர்  இந்த பாடு முதன்மை தரவுத் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

அதே வேளையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று ரபிசி ரம்லி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset