நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிவாசல், சூராவ்களில் முகக் கவசம் அணிய வலியுறுத்து

அலோர்ஸ்டார்:

கெடா மாநிலத்தில் கோவிட்-19 தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் பள்ளிவாசல், சூராவ்களுக்கு வருபவர்கள் முகக் கவசம் அணிய ஊக்கவிக்கப்படுகிறார்கள்.

அனைத்து தரப்பினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் முகக் கவசம் அணிய உத்தரவிடப்படுகிறது என்று கெடா மாநில இஸ்லாமிய  சமய விவகாரத் துறை இயக்குநர் டத்தோ அப்துல் கனி கூறினார்.

நாட்டில் கோவிட் -19 தொற்று  பரவுவதை தடுக்க வேண்டும்.

குறிப்பாக மக்களிடையே, கட்டுப்படுத்தப்பட்டு தடுக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

கோவிட்-19 தொற்று அபாயத்தில் உள்ளவர்கள்,  காய்ச்சல்,  இருமல் அறிகுறிகள் உள்ளவர்கள் பள்ளிவாசல்,  சூராக்களில் நடைபெறும் எந்தவொரு  நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ள வேண்டாம்  என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset