நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிரம்பானின் அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதியர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்

சிரம்பான்:

அடுக்குமாடி குடியிருப்பில் திருமணமான தம்பதியர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இதனை சிரம்பான் போலீஸ் தலைவர் அரிபாய் தராவி உறுதிப்படுத்தினார்.

சிரம்பான் ஜாலான் கெலிலிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இந்த சம்பவம் குறித்து போலீஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மதியம் 12.49 மணிக்கு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றனர்.

வீட்டில் இறந்து கிடந்த அவர்களின் சடலத்த மீண்ட அதிகாரிகள் சவபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மரணமடைந்த 34 வயதான வெளிநாட்டவர் போர்ட்டிக்சனில் உள்ள சர்வதேச பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

அதே வேளையில் 31 வயதுடைய அவரின் மனைவி லிங்கியில் பல் மருத்துவராக பணி புரிந்து வந்துள்ளார்.

கொலைக்கான அறிகுறிகள் இல்லாத பட்சத்தில் இந்த சம்பவத்தை திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset