நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரியாத் சென்றடைந்தார்

ரியாத்:

உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மூன்று நாள் பயணமாக ரியாத் சென்றடைந்துள்ளார்.

பிரதமர் பயணித்த சிறப்பு விமானம்  மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 3.25 மணிக்கு கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பிரதமர் தலைமையிலான மலேசிய குழுவை சவூதி அரேபியாவின் துணை வெளியுறவு அமைச்சர் வலீத் ஏ எல் கெரிஜி, மலேசிய  வெளியுறவு அமைச்சர் முகமது ஹசன், சவுதி அரேபியாவுக்கான மலேசிய தூதர் வான் ஜைதி வான் அப்துல்லா ஆகியோர் வரவேற்றனர்.

உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஆற்றல் என்ற கருப்பொருளுடன் இந்த இன்று தொடங்கும் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்தை ரியாத் நடத்துகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset