நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது 

ஜொகூர் பாரு: 

ஜொகூர் மாநிலத்தில் அமையவிருக்கும் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையம் ஒன்று அமைக்கப்படும் என்று பெர்சத்து கட்சியைச் சேர்ந்த செகுபாட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

செகுபாட்டின் பதிவு தொடர்பு பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட நிலையில் அவர் டாங் வாங் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் ரஃபிக் ரஷித் அலி உறுதிப்படுத்தினார். 

முன்னதாக, அரசாங்கம் BERJAYA மற்றும் GENTING ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக வெளிவந்த தகவலைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முற்றிலுமாக மறுத்தார். 

ஜொகூரில் நிறுவப்படும் சூதாட்ட மையத்தைப் பணம் தாண்டவமாடும் இடமாக அமையும் என்று செகுபாட் சர்சைக்குரிய வகையில் கருத்தை முன்வைத்தார். இதனால் அவருக்கு எதிராக புகார்கள் மேற்கொள்ளப்பட்டது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset