நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாதுகாப்பு சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் வரை பாடுவின் பதிவைத் தற்காலிகமாக நிறுத்துங்கள்: ஒங் கியான் மிங் கருத்து

கோலாலம்பூர்: 

அரசாங்கத்தால் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட முதன்மை தரவுகள் தளமான PADU வில் சில பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட சிக்கல்களைக் களையப்படும் வரையில் PADU வில் பதிவு செய்யப்படும் நடைமுறையைத் தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என்று DAP கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். 

PADU திட்டத்தின் சில அம்சங்களை சோதனை திட்டத்திற்கு உட்படுத்தியிருக்க வேண்டும். பின்னரே அதனை அறிமுகம் செய்திருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். 

சில பயனர்கள் PADU வில் முதல்முறையாக பதிவு செய்திருந்தாலும் இ-கேஒய்சி ( பயனர்களை அறியும் தகவல் சேவை) யின் ஒப்புதல் கிடைப்பதில் சில பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது. 

ஆக, அரசாங்கம் உடனடியாக முடிவெடுத்து தற்காலிகமாக இதன் பதிவை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொன்டார். இல்லையெனில், எதிர்க்கட்சி தரப்பு இந்த விவகாரத்தைக் கையில் எடுப்பார்கள் என்று அவர் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset