செய்திகள் மலேசியா
துபாய் நகர்வு சதித்திட்டத்தில் துன் மகாதீர் ஈடுபடவில்லை: மர்சூக்கி யஹ்யா விளக்கம்
கோலாலம்பூர்:
ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் துபாய் நகர்வு சதித்திட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் ஈடுபடவில்லை என்று முன்னாள் பெஜுவாங் கட்சியின் துணைத்தலைவர் மர்சூக்கி யஹ்யா கூறினார்.
துபாய் நகர்வு சதித்திட்டத்தில் துன் மகாதீர் இடம்பெற்றுள்ளார் என்று கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை. கடந்த சில வாரங்களாக துன் மகாதீர் எந்தவொரு வெளிநாட்டு பயணங்களும் மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான மர்சுக்கி சொன்னார்.
சில அரசியல் கட்சிகள் மற்றும் பிரமுகர்கள் துபாய் நகர்வு சதித்திட்டத்தில் துன் மகாதீரும் இடம்பெற்றார் என்று பொய்யுரைத்து வருவது வேதனையை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
துன் மகாதீர் மீது சுமத்தப்படும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றது என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க துபாய் நகர்வு சதித்திட்டத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் துன் பட்டத்தைக் கொண்ட தலைவர்களும் இடம்பெற்றனர் என்று சமூக தொடர்புத்துறையின் துணை இயக்குநர் டத்தோ இஸ்மாயில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm