நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் 13 வயது இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய இளம் தொழிலாளி கைது 

கோத்தா பாரு: 

கிளந்தான் மாநிலத்தில் 13 வயதுடைய இளம்பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய இளம் தொழிலாளி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

பாதிக்கப்பட்ட பெண் திரெங்கானு மாநிலம் பெசுட் நகரிலிருந்து கிளந்தான் பாசீர் புத்தேவிற்கு சந்தேக நபரால் அழைத்து வரப்பட்டு வயல்வெளி ஒன்றில் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார். 

இந்த சம்பவம் குறித்து ஜனவரி 2ஆம் தேதி காலை 6.50 மணிக்குப் போலீஸ் புகார் செய்யப்பட்டது. 

சம்பந்தப்பட்ட நபர் கோலாலம்பூர் மாநகருக்குத் தப்பிக்க முற்பட்ட வேளையில் அவர் கைது செய்யப்பட்டதாக பாசீர் புத்தே கால்வதுறை தலைவர் ஸைசுல் கூறினார். 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 376யின் கீழ் சம்பந்தப்பட்ட இளம் தொழிலாளர் கைது செய்யப்பட்டார் என்று அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset