நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்கா துபாயில் கவனம் செலுத்துவதைவிட அரசு பணிகள் தான் முக்கியம்: பிரதமர்

புத்ராஜெயா:

லங்கா துபாய் விகாரத்தில்  நான் கவனம் செலுத்துவதைவிட என் முன் குவிந்துள்ள அரசு பணிகள் தான் எனக்கு முக்கியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் எதிர்கட்சியுடன் அரசாங்க பிரதிநிதிகளும் துபாயில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

என்னை பொறுத்தவரையில் இவையெல்லாம்  ஒற்றுமை அரசாங்கத்தை ஒருபோதும் பாதிக்காது. அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதுமில்லை என்று பிரதமர் கூறினார்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் துபாயில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த லங்கா துபாய் நடவடிக்கையால்  ஒற்றுமை அரசாங்கத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

நான் இந்த லங்கா துபாய் பற்றி ஊடகங்களில் படித்தேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை, கையில் இருக்கும் வேலையில் கவனம் செலுத்துவதில் தான் நான் முக்கியத்துவம் கைகொடுக்க விரும்புகிறேன்,

மேலும் என்னை பொறுத்தவரையில் இது ஒற்றுமை அரசாங்கத்தை எந்த வகையிலும் பாதிக்காது.

ஆகையால் அதைப் பற்றியும் நான் கவலைப்பட போவதில்லை என்று பாடு தொடக்க விழாவில் பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset