செய்திகள் கலைகள்
பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி பெண் செய்தியாளரிடம் பாலியல் தொல்லை: முன்ஜாமீன் கேட்டு போலிஸில் விண்ணப்பம்
கோழிக்கோடு:
பிரபல மலையாள முன்னணி நடிகர் சுரேஷ்கோபி. இவர் தமிழில், அஜித்தின் தீனா, ஷங்கர் இயக்கிய ஐ, விஜய் ஆண்டனி நடித்த ‘தமிழரசன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
பாஜக பிரமுகரான இவர், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் கோழிகோட்டில் பேட்டியளித்தார்.
அப்போது, கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் தோளில் கை வைத்து சிலிமிஷம் செய்ய ஆரம்பித்தார். அவர் கையைத் தட்டிவிட்டபோதும் சுரேஷ்கோபி மீண்டும் அவர் தோளைத் தொட்டும் அணைக்க முயன்றும் பேசினார். பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததை சக பத்திரிகையாளர்கள் பார்த்து திகைத்தனர். பின்னர் அவரிடமிருந்து அவரை மீட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பானது. பின்னர் இதற்காக அவர் மன்னிப்பு கேட்டார்.
அந்தச் செய்தியாளர், கோழிக்கோடு நடக்காவு போலீஸ் நிலையத்தில் சுரேஷ்கோபி மீது புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் போலீஸார் தன்னை கைது செய்யாமல் இருக்க, கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு, சுரேஷ்கோபி மனு தாக்கல் செய்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 4:31 pm
மலேசிய ரசிகர்களை வசீகரிக்கப் போகும் ஏஆர் ரஹ்மானின் கண்கவர் இசை நிகழ்ச்சி
April 30, 2024, 11:38 am
இசை பெரிதா? மொழி பெரிதா? கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்
April 29, 2024, 7:52 pm
நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி
April 25, 2024, 6:48 pm
ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் காங்கிரஸில் இணைகிறார்
April 21, 2024, 9:47 am
தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
April 20, 2024, 2:24 pm
ரோமியோ திரைப்படத்தை அன்பே சிவமாக ஆக்கிவிடாதீர்கள் : விஜய் ஆண்டனி
April 20, 2024, 11:12 am
நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகிறது
April 19, 2024, 5:29 pm
அமீர் கானுக்கு எதிரான DEEP FAKE தேர்தல் பிரச்சார வீடியோ: போலீஸார் வழக்கு
April 19, 2024, 1:22 pm