நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீனுக்கு ஆதராக முற்றுகை போராட்டம்: போலீஸ் விசாரணை அறிக்கையை திறந்தது

கோலாலம்பூர்:

பாலஸ்தீனுக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் தொடர்பில் போலீஸ் விசாரணை அறிக்கையை திறந்துள்ளது என்று வங்சா மாஜூ போலீஸ் தலைவர் அஸ்ஹாரி அபு சமா கூறினார்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்காகி பாலஸ்தீனத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து வருகின்றனர்.

பாதிக்கப்படும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தலைநகரில் முற்றுமை போராட்டம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க தூதரகத்தின் முன் 6 நாட்களுக்கு இப்போராட்டம் நடத்தப்படவிருந்தது.

ஆனால் தூதரகத்தின் முன் அணிவகுத்து செல்ல போலீஸ் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் ஆதரவாளர்கள் சாலையோரத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை. இதனால் போலீஸ் விசாரணை அறிக்கையை திறந்துள்ளது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset