நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் பட்டம் கொண்ட அனைவரையும் விசாரிக்க வேண்டும்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

துன் பட்டம் கொண்ட அனைவரையும் விசாரிக்க வேண்டும்.

விளக்கமளிக்க தவறினால் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது கூறினார்.

முன்னாள் நிதியமைச்சர் துன் டைமுக்கு எதிராக எம்ஏசிசி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக, அவரின் குடும்பத்தாருக்கு சொந்தமான கட்டடத்தை எம்ஏசிசி பறிமுதல் செய்துள்ளது.

இது குறித்து பேசிய துன் மகாதீர், 

நாட்டில் உள்ள அனைத்து துன்களையும் விசாரிக்க வேண்டும் என்பதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். 

அவர்களுக்கு எங்கிருந்து, எப்படி பணம் கிடைத்தது என்பதை விளக்க முடியாவிட்டால், அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால், அவர்கள் அதை மறைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இருக்க வேண்டும்.

அவர்களின் தவற்றை உறுதி செய்ய ஆவண ஆதாரங்களைப் பெற வேண்டிய அவசியமில்லை. 

சந்தேகம் ஒன்றே போதும் என்று துன் மகாதீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset