நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை 140 அடி முருகப் பெருமானுக்கு பன்னீர் அபிஷேக விழா: டான்ஸ்ரீ நடராஜா

பத்துகேவ்ஸ்:

பத்துமலை 140 அடி உயர முருகப் பெருமானுக்கு பன்னீர் அபிஷேக விழா சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

இவ்விழா  8ஆம் ஆண்டாக நடைபெறவுள்ளது என்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.

ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு பத்துமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அன்றைய தினம் பத்துமலையில் அமைந்துள்ள 140 அடி உயர முருகப் பெருமானுக்கு பன்னீர் அபிஷேகமும் நடைபெறவுள்ளது.

காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் இந்த பன்னீர் அபிஷேகம் நடைபெறும்.

பக்தர்கள் அனைவரும் முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம் செய்யலாம்.

ஆகவே பொது விடுமுறை என்பதால் பக்தர்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset