நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரவாங் கொலை வழக்கில் மேலும் ஐவர் கைது

கோம்பாக்:

ரவாங் கொலை வழக்கில் மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை கோம்பாக் போலீஸ்படையின் இடைக்கால தலைவர் நூர் அரிபின் நசீர் உறுதிப்படுத்தினார்.

ரவாங், சுங்கைசோவில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் புதைக்கப்பட்ட ஆடவரின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர.

கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இக்கொலை வழக்கில் தொடர்பாக போலீசார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இக்கொலை சம்பவம் நடந்த அடுத்த 24 மணி நேரத்திற்கும் 5 சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

டேசா அமான் பூரி அடுக்குமாடி குடியிருப்பில் 2 பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து புன்சாக் அலாம், சுங்கைசோவில் மேலும் இரு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் அனைவரும் 19 வயது முதல் 45 வயதுக்கு உட்ப்பட்டவர்களாவர்.

இக்கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆடவனின் காதலிக்கு தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு தம்மால் உரிய பதில்களை தர முடியாது.

அதே வேளையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆபாச வீடியோ இக்கொலை சம்பவத்திகு தொடர்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset