நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில போலிஸ்படைத் தலைவராக குமார் நியமனம்

ஜொகூர் பாரு:

ஜொகூர் மாநிலத்தின் புதிய போலீஸ் படைத் தலைவராக எம். குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் நியமனம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தேசிய போலீஸ்படையின் செயலாளர் அல் ஷாப்னி அஹ்மத் கூறினார்.

தேசிய போலீஸ்படைச் சேர்ந்த 42 மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக புக்கிட் அமான் அறிவித்துள்ளது.

இதில் புக்கிட் அமான் குற்றத் தடுப்பு, சமூகப் பாதுகாப்புத் துறையின் இயக்குநராக மாறியதன் மூலம் டத்தோ வான் ஹசன் வான் அஹ்மது முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருல் ஸமான் மாமாட் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் தற்போதைய துணை போலீஸ் தலைவர் குமார் முத்துவேலு அவரின் இடத்தை நிரப்பவுள்ளார்.

புக்கிட் அமானைச் சேர்ந்த அஃபெண்டி செனின் மாநிலத்தின் துணை போலீஸ் தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.

இந்த நியமனங்கள் அடுத்த மாதம் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset