செய்திகள் மலேசியா
இல்ஹாம் கட்டடம் விவகாரத்தில் எம்.ஏ.சி.சி-யின் விசாரணையில் யாரும் தலையிட மாட்டார்கள்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
இல்ஹாம் கட்டடம் விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் யாரும் தலையிட மாட்டார்கள். அவர்கள் எந்தத் தடையுமின்றி தங்களின் விசாரணையைத் தொடர்வார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
முன்னாள் நிதியமைச்சர் துன் டைம் ஜைனுடினின் குடும்பத்திற்குச் சொந்தமான இல்ஹாம் கட்டடத்தை எம்.ஏ.சி.சி கைப்பற்றியுள்ளது.
பெரிய அளவிலான ஊழலில் ஈடுபட்டவர்கள் உட்பட எந்த வகையான ஊழல்களிலும் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு எம்.ஏ.சி.சி மற்றும் நாட்டின் நீதித்துறை துணிச்சலானது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அன்வார் தெரிவித்துள்ளார்.
எம்.ஏ.சி.சி அவர்களின் கடமைகளைச் செய்யட்டும். யாராக இருந்தாலும் விசாரணையிலிருந்து தப்பிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெரிய ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் செல்வாக்கையும் ஊடகங்களையும் குறிப்பாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தீண்டத்தகாதவர்கள் என்று நினைப்பதைத் தாம் விரும்பவில்லை என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பதவியிலிருந்தாலும் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் மக்கள் தனது நிர்வாகத்தை விமர்சிப்பதை தான் விரும்பவில்லை என்றும் அன்வார் மேலும் விளக்கினார்.
இந்த வழக்கில் எம்.ஏ.சி.சி விசாரணையில் தேவையற்ற அனுமானங்களைத் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் அன்வார் கேட்டுக் கொண்டார்.
பதவியிலுள்ள ஒருவர் விசாரிக்கப்படும் போதெல்லாம் ஓர் அரசியல்) திட்டம் இருக்க வேண்டும் என்ற எந்த முடிவுக்கும் செல்ல வேண்டாம்.
நேற்று, டைமின் குடும்பத்தினருக்குச் சொந்தமான கட்டடத்தை எம்.ஏ.சி.சி கைப்பற்றியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am