நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கே.எல் டவரிலுள்ள சுழலும் உணவகத்தை மூட நீதிமன்றம் உத்தரவு

பெட்டாலிங் ஜெயா:

கே.எல் டவரிலுள்ள பிரபலமான சுழலும் உணவகத்தை மூட கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அடுத்தாண்டு ஜனவரி 4-ஆம் தேதிக்குள் கே.எல் டவரிலுள்ள செயல்பட்டு வரும் உணவகத்தை காலி செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மெனரா கோலாலம்பூர் Sdn Bhd மற்றும் அதன் தற்போதைய உரிமையாளர் Hydroshoppe Sdn Bhd, உணவக உரிமையாளரான ஏசியன் கிச்சனுக்கு எதிராக இந்த உத்தரவை கோரியது.

உணவகம் மூடப்பட்டதை ஏசியன் கிச்சனின் தலைமை நிர்வாக அதிகாரி ரிங்கோ காவ் உறுதிப்படுத்தினார்.

இந்த உத்தரவு தமக்கு அதிர்ச்சியைத் தருவதாகவும் அவர் கூறினார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருப்பதால் முன்பதிவு அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திரும்பத் தருவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset