நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டானாவ் கோத்தா ஸ்ரீ திருமுருகன் ஆலய விவகாரம்; ஆர்ஓஎஸ் முடிவுக்கு கட்டுப்படுவோம்: கெவின் ரமேஷ்

கோலாலம்பூர்:

டானாவ் கோத்தா ஸ்ரீ திருமுருகன் ஆலய விவகாரம் தொடர்பில் ஆர்ஓஎஸ் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று ஆலய நடவடிக்கை குழுத் தலைவர் கெவின் ரமேஷ் கூறினார்.

ஸ்ரீ திருமுருகன் ஆலய நிர்வாகத்தின் அவசரக் கூட்டம் அண்மையில் நடைபெறவிருந்தது.

ஆனால் அன்றைய தினம் ஆலயம் மூட்டப்பட்டது. ஆலயத்தின் முன்னாள் நிர்வாகத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

இதற்கு காரணமானவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். 

அதே வேளையில் ஆலய நிர்வாகத்தின் அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் ஆர்ஓஎஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இனி இந்த விவகாரத்தில் ஆர்ஓஎஸ் தான் முடிவு எடுக்க வேண்டும். அது எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படவுள்ளோம்.

அதே வேளையில் ஆலயத்திற்கு சொந்தமான நகைகள் என்னிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

நகை எங்கள் தரப்பிடம் உள்ளது. ஆனால் தற்போது முறையான ஆலய நிர்வாகம் இல்லை. 

அதனால் நகைகளை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க தயார். முறையான நிர்வாகம் இருந்தால் அவர்களிடமும் ஒப்படைக்க தயாதயார் என்று கெவின் ரமேஷ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset