செய்திகள் மலேசியா
கிழக்கை நோக்கிய கொள்கையில் தற்போது சீனாவும் இடம்பெற்றுள்ளது: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
கிழக்கை நோக்கிய கொள்கையில் தற்போது சீனா நாடும் இடம்பெறுவதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதற்கு முன், கிழக்கை நோக்கிய கொள்கையில் தென்கொரியா, ஜப்பான் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மூன்றாவது நாடாக சீனா இடம்பெறுகிறது. இம்மூன்று நாடுகளின் வளர்ச்சிகளை ஓர் எடுத்துகாட்டாக மலேசியா எடுத்துக்கொள்ளும் என்று அன்வார் மேலும் சொன்னார்.
கடந்த 40 வருடங்களாக இந்த கொள்கையானது உள்ளது. அதனை மறு மதிப்பீடு செய்தும் மீண்டும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் உள்ள கொள்கைகள் யாவும் நடப்பு உலக அரசியல், பொருளாதார மற்றும் இலக்கவியல் மாற்றத்திற்கேற்க இருக்க வேண்டும் என்று தோக்கியோவில் நடைபெற்ற கலந்துரையாடலில் அன்வார் மேற்கண்டவாறு சொன்னார்.
கிழக்கை நோக்கிய கொள்கை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரால் கொண்டு வரப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி
April 29, 2024, 10:57 am
ஃபாஹ்மி பேச்சை நம்பாதீர்; பாஸ் கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்ளும்: ராட்ஸி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 29, 2024, 10:30 am
ஆசியான் விசா சுற்றுலா துறையை மேம்படுத்த உதவினாலும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கலாம்
April 29, 2024, 10:08 am