நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிழக்கை நோக்கிய கொள்கையில் தற்போது சீனாவும் இடம்பெற்றுள்ளது: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 

கோலாலம்பூர்: 

கிழக்கை நோக்கிய கொள்கையில் தற்போது சீனா நாடும் இடம்பெறுவதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இதற்கு முன், கிழக்கை நோக்கிய கொள்கையில் தென்கொரியா, ஜப்பான் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மூன்றாவது நாடாக சீனா இடம்பெறுகிறது. இம்மூன்று நாடுகளின் வளர்ச்சிகளை ஓர் எடுத்துகாட்டாக மலேசியா எடுத்துக்கொள்ளும் என்று அன்வார் மேலும் சொன்னார். 

கடந்த 40 வருடங்களாக இந்த கொள்கையானது உள்ளது. அதனை மறு மதிப்பீடு செய்தும் மீண்டும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

மலேசியாவில் உள்ள கொள்கைகள் யாவும் நடப்பு உலக அரசியல், பொருளாதார மற்றும் இலக்கவியல் மாற்றத்திற்கேற்க இருக்க வேண்டும் என்று தோக்கியோவில் நடைபெற்ற கலந்துரையாடலில் அன்வார் மேற்கண்டவாறு சொன்னார். 

கிழக்கை நோக்கிய கொள்கை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரால் கொண்டு வரப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset