நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி் அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று தொடங்குகிறது

கோலாலம்பூர் :

மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு மூன்று நாள் கொண்டாட்டம் இன்று புக்கிட் ஜலில் தேசிய அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது.

இந்தக் கொண்டாட்டத்தையொட்டி சாலை போக்குவரத்து குற்றங்களுக்கான காவல் துறையின் 50 விழுக்காட்டு கழிவு, ரஹ்மா ரொக்க உதவிக்கான பதிவு, சிறப்பு விடுமுறை காலத் திட்டம், இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.  

மேலும், தொழில் முனைவோர், பேரங்காடிகள், பல்பொருள் விற்பனை மையங்களின் 226 உரிமையாளர்களை உள்ளடக்கிய மடாணி மெகா விற்பனைவிழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சந்தையில் விற்கப்படும் பொருள்களுக்கு 30 விழுக்காடு வரை கழிவு வழங்கப்படும்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிட் ஹமிடி மைநெக்ஸ்ட் தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் பயிற்சித் திட்டத்தை (திவேட்) தொடக்கி வைப்பார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் பொது மக்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாகப் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இன்றிரவு 2023-ஆம் ஆண்டிற்கான மலேசிய கிண்ண கால்பந்து இறுதியாட்டமும் 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண ஆண்கள் ஜூனியர் ஹாக்கிப் போட்டியும் நடைபெறவுள்ளதால் இங்குக் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset