நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைநகரில் ராகுல் காந்தியுடன் ஒரு பொன் மாலைப் பொழுது

கோலாம்பூர்:

இந்திய தேசிய காங்கிரஸின் முன்னணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நாளை மலேசியாவில் நம்பிக்கை ஏற்பாட்டில் நடைபெறும் ராகுல் காந்தியுடன் ஒரு பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சியில் பங்கேற்று பேச இருக்கிறார்.

நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை மலேசிய முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பான எம்.எம்.ஒய்.சி செய்து வருகிறது. இதற்கான ஒத்துழைப்பை மலேசிய இயக்கங்கள் பலவும் முன்னின்று வழங்கி வருகின்றன.

இஸ்லாமியக் கல்வி வாரியம், பெர்மிம் பேரவை, கிம்மா, ஈமான், மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம், கெபிமா, மலேசிய தமிழ் இந்தியர் சங்கம், அயலக தமிழர் இயக்கம், மாவார், ப்ரிம் பேராக், சிம்ஸ், டிபிஎப் போன்ற அமைப்புகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் ஒத்துழைத்து வருகின்றன.    

நாளை  09.12.2023 சனிக் கிழமை, மாலை 7.00க்கு தலைநகர் Berjaya Times Square Hotelஇல் இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புக்கு +60169305786/ +60166221280
மின்னஞ்சல்: info@nambikkai.com.my

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset