நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுவன் ஜெய்ன் ரயான் கொலை செய்யப்பட்டாரா?

பெட்டாலிங் ஜெயா:

காணாமல் போன சிறுவன் ஜெய்ன் ரயான் நேற்று தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான்.

இந்நிலையில் அச்சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது

சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் துறையின் பிரேதப் பரிசோதனையின் முடிவில் அச்சிறுவனின் கழுத்திலும் உடலிலும் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.

இந்தக் காயத்தில் குற்றவியல் கூறுகள் இருப்பதாகவும் இது குறித்து கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல்கள் இருப்பின் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னதாக, 6 வயது சிறுவன் ஜெய்ன் ரயான் செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணி முதல் காணவில்லை என்று அவரது தாயார் காவல்துறையில் புகாரளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset