நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவு விற்பனையாளர் 27 முறை கத்தியால் குத்தி கொலை

ஜார்ஜ்டவுன்:

ஜெலுத்தோங், ஜாலான் ஓய் தியாம் சியூவ், தாமான் கான்டினென்டல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் உணவு விற்பனையாளர் 27 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

60 வயதான தே தேய்க் சீய் எனும் முதியவர் மார்பு, கழுத்து பகுதிகளில் 27 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

பினாங்கு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

நேற்று மாலை 6.18 மணிக்கு அப்பகுதியில் சண்டை நடந்ததாக அவரது தரப்புக்குத் தகவல் கிடைத்ததாக வடகிழக்கு மாவட்ட காவல்துறையின் செயல் தலைவர் வி. சரவணன்
கூறினார்.

அம்முதியவர் கார் நிறுத்துமிடத்தில் இருப்பதை காவல்துறையினர் கண்டுள்ளனர்.

பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரின் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் மொத்தம் 27 குத்துகள் கண்டறியப்பட்டது.

மேலும் கருத்து தெரிவித்த சரவணன், லிஃப்ட் மற்றும் பாதுகாவலர் அறையிலிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட விசாரணைகளைக் காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

அந்தப் பதிவின் மூலம் இரண்டு ஆண்கள் சந்தேக நபர்கள் குடியிருப்புக்குள் மோட்டார் சைக்கிளில் செல்வது கண்டறியப்பட்டது என்றார்.

அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரைக் கத்தியால் குத்தினார். மற்றவர் மோட்டார் சைக்கிளில் காத்திருந்தார்.

குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset