நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் அமீர்கான், விஷ்ணு விஷாலை காப்பாற்றிய மீட்பு படையினர் 

சென்னை: 

மிக்ஜம் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. 

தமிழக அரசின் உத்தரவின்பேரில், பொது மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, காரப்பாக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் நடிகர் அமீர்கானும் வெள்ளத்தினால் சிக்கிக்கொண்டார். 

இருவரையும் மீட்புப்படையினர் பத்திரமாக படகு மூலம் மீட்டனர். தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நடிகர் விஷ்ணு விஷால் தமது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset