நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாசீர் மாஸில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3260ஆக பதிவு 

பாசீர் மாஸ்: 

பாசீர் மாஸ் சுற்றுவட்டாரத்தில் சூழ்ந்துள்ள வெள்ளத்தால் இதுவரை 989 குடும்பங்களைச் சேர்ந்த 3260 பேர் தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

தற்போது ஒன்பது வெள்ள துயர்துடைப்பு மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக சமூக இலாகாவின் பேரிடர் அகப்பக்கம் தெரிவித்தது. 

மேலும், மூன்று வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. எஸ்.கே கெடாய் தஞ்சோங் மையத்தில் சுமார் 58 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மஸ்ஜித் முக்கிம் பாடாங் லிசின் மையத்திலும் 320 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

வெள்ள நிவாரண உதவிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக மாநில பேரிடர் நிர்வகிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset