நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சென்னையில் மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்து

கோலாலம்பூர் :

சென்னையில் தொடர் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது சென்னையில் இருக்கும் மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி  வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

சென்னையின் அண்மைய நிலவரங்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் அல்லது அங்கு வசிக்கும் மலேசியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறு செளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

தூதரக உதவி தேவைப்படுவோர்  சென்னையில் உள்ள மலேசியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset