நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் மாலை வேளையில் இடியுடன் கூடிய கடுமையான மழை: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் 

கோலாலம்பூர்: 

நாடு முழுவதும் மாலை வேளையில் இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

கிழக்குகரை மாநிலங்களில் கடுமையான மழை பெய்யும் என்றும் அங்குள்ள மக்கள் யாவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தீபகற்ப மலேசியாவின் வடக்கு மாநிலமான கெடாவில் அதிகளவில் மழை பெய்யும் என்றும் சிலாங்கூர், பேராக், மற்றும் ஜொகூர் மாநிலங்களிலும் மாலை 5 மணி வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சரவாக், சபா மாநிலங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset