நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இ-மடானி மின்னியல் பணம் கிடைக்காதவர்கள் மறுபரிசீலனை செய்யலாம்

பெட்டாலிங் ஜெயா :

இ-மடானி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 ரிங்கிட் மின்னியல் பணத்திற்கான விண்ணப்பம் நேற்று தொடங்கியது.

இந்நிலையில், அம்மின்னியல் பணதிற்காக விண்ணப்பம் செய்து அத்தொகையைப் பெற தவறியவர்கள் மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட 4 செயலிகளில் ஏதேனும் ஒன்றில் மறுபரிசீலனை செய்யலாம்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணினிப் பிழை காரணமாக தோல்வியுற்றாலோ பயனர்கள் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அம்மின்னியல் பணத்திற்கு விண்ணம் செய்ய பரிந்துரைக்கப்படுகின்றது.

அங்கீகரிக்கப்படாத அடையாள அட்டை எண், பெயர் மற்றும் அடையாள எண் பொருந்தவில்லை, தவறான அடையாள அட்டை எண், தேசியப் பதிவிலாகாவில் பதிவேடு காணப்படவில்லை போன்ற காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset