செய்திகள் வணிகம்
ஒரே வாரத்தில் 900 புரோட்டான் எஸ்.70 ரக கார் முன் பதிவு
பெட்டாலிங் ஜெயா :
புரோட்டன் நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்திய எஸ்.70 ரக காரின் விலை கடந்த மாதம் 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
எஸ்.70 ரக காரின் விலை அறிவிப்புக்குப் பிறகு முன்பதிவுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
எஸ்.70 ரக கார் ஒரே வாரத்தில் 900 யூனிட்கள் முன் பதிவு செய்யப்பட்டிருப்பதாக புரோட்டான் எடார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஸ்லான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை மொத்தம் 3000 யூனிட்கள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.70 ரக காரின் மாடல், செயல்திறன், தொழிநுட்பம் மற்றும் நடைமுறைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்குப் பிந்தைய சேவையில் தொடர்ச்சியான மேம்பாடுகள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியது.
இந்த ஆண்டு வலுவாக முடிவடையும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மேலும் ஆண்டு இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு கார்களை வழங்குவோம் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கடந்த நவம்பரில் புரோட்டானின் மொத்த விற்பனை 141,900 யூனிட்களை (உள்நாட்டில்: 138,876 யூனிட்கள், ஏற்றுமதி: 3,024 யூனிட்கள்) எட்டியது.
இது கடந்த 2022-ஆம் ஆண்டு முழுவதும் 141,432 யூனிட்களைப் பதிவு செய்த மொத்த விற்பனையை மிஞ்சியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am