![image](https://imgs.nambikkai.com.my/Gaza-2cc8e.jpg)
செய்திகள் உலகம்
காசாவில் பாலஸ்தீனர்கள் பலி 15,000ஐக் கடந்தது
கான் யூனிஸ்:
காசாவில் இஸ்ரேல் ராணுவம் சுமார் 9 வாரங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,200 கடந்துள்ளது. இதில் 70 சதவீதத்தினர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் கொடூரமாக குண்டுவீச்சைத் தொடங்கியதால் இதுவரை 193 பேர் உயிரிழந்தனர்; சுமார் 600 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 7ம் தேதிய முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,207ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 70 சதவீதத்தினர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காசாவிலுள்ள சுகாதாரக் கட்டமைப்புகளையும், மருத்துவ நிலைகளையும் இஸ்ரேல் படையினர் வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
வடக்கு காசாவில் சுமார் 80,000 பாலஸ்தீனர்கள் உணவு, மருந்துப் பொருள்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலின் குண்டுவீச்சு மேலும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 11:02 am
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 17 பேருடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல்
July 25, 2024, 2:28 pm
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இலங்கைக்கு 93ஆவது இடம்
July 25, 2024, 12:46 pm
வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்க அமீரகத்தில் சுகாதார காப்பீடுடன் கூடிய சுற்றுலா விசா
July 25, 2024, 10:28 am
கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரித்ததற்காக இலங்கை அரசு மன்னிப்பு கோருகிறது
July 25, 2024, 9:57 am
நெட்டன்யாஹுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் ஆர்ப்பாட்டங்கள்
July 24, 2024, 5:42 pm
ஒலிம்பிக் போட்டிக்கு பிறகே புதிய அரசாங்கம்: பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன்
July 24, 2024, 5:27 pm
கனடாவில் ஹிந்து கோயில் மீது தாக்குதல்
July 24, 2024, 3:23 pm