
செய்திகள் உலகம்
காசாவில் பாலஸ்தீனர்கள் பலி 15,000ஐக் கடந்தது
கான் யூனிஸ்:
காசாவில் இஸ்ரேல் ராணுவம் சுமார் 9 வாரங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,200 கடந்துள்ளது. இதில் 70 சதவீதத்தினர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் கொடூரமாக குண்டுவீச்சைத் தொடங்கியதால் இதுவரை 193 பேர் உயிரிழந்தனர்; சுமார் 600 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 7ம் தேதிய முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,207ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 70 சதவீதத்தினர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காசாவிலுள்ள சுகாதாரக் கட்டமைப்புகளையும், மருத்துவ நிலைகளையும் இஸ்ரேல் படையினர் வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
வடக்கு காசாவில் சுமார் 80,000 பாலஸ்தீனர்கள் உணவு, மருந்துப் பொருள்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலின் குண்டுவீச்சு மேலும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2025, 4:46 pm
அமெரிக்கா ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிக்க மற்ற நாடுகள் சண்டையிட்டு சாக வேண்டும்: ...
May 25, 2025, 1:12 pm
‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி கொன்றுவரும் இஸ்ரேல் ராணுவம்’
May 25, 2025, 12:45 pm
பெண்டகனில் நிருபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் ந...
May 25, 2025, 11:39 am
ஏர் ஆசியா விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய ஆடவர்
May 25, 2025, 11:09 am
உலகெங்கும் அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 1300 பேருக்கு சவுதி மன்னரின் விருந்தாளிகள...
May 24, 2025, 10:56 am
ஜெர்மனியில் கத்திக்குத்துக்கு இலக்கான 17 பேர்: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனும...
May 24, 2025, 10:50 am
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டினர் படிப்பதற்கான தடை உத்தரவை நீதிமன்றம் நிறு...
May 24, 2025, 10:43 am
வங்கதேச தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் ராஜினாமா?
May 23, 2025, 10:29 am
காசாவில் உள்ள அப்பாவி மக்களுக்காக கருணை காட்டுங்கள்: இஸ்ரேலுக்கு உலக சுகாதார நிறுவ...
May 23, 2025, 10:22 am