செய்திகள் உலகம்
காசாவில் பாலஸ்தீனர்கள் பலி 15,000ஐக் கடந்தது
கான் யூனிஸ்:
காசாவில் இஸ்ரேல் ராணுவம் சுமார் 9 வாரங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,200 கடந்துள்ளது. இதில் 70 சதவீதத்தினர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் கொடூரமாக குண்டுவீச்சைத் தொடங்கியதால் இதுவரை 193 பேர் உயிரிழந்தனர்; சுமார் 600 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 7ம் தேதிய முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,207ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 70 சதவீதத்தினர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காசாவிலுள்ள சுகாதாரக் கட்டமைப்புகளையும், மருத்துவ நிலைகளையும் இஸ்ரேல் படையினர் வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
வடக்கு காசாவில் சுமார் 80,000 பாலஸ்தீனர்கள் உணவு, மருந்துப் பொருள்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலின் குண்டுவீச்சு மேலும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am