
செய்திகள் உலகம்
காசாவில் பாலஸ்தீனர்கள் பலி 15,000ஐக் கடந்தது
கான் யூனிஸ்:
காசாவில் இஸ்ரேல் ராணுவம் சுமார் 9 வாரங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,200 கடந்துள்ளது. இதில் 70 சதவீதத்தினர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் கொடூரமாக குண்டுவீச்சைத் தொடங்கியதால் இதுவரை 193 பேர் உயிரிழந்தனர்; சுமார் 600 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 7ம் தேதிய முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,207ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 70 சதவீதத்தினர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காசாவிலுள்ள சுகாதாரக் கட்டமைப்புகளையும், மருத்துவ நிலைகளையும் இஸ்ரேல் படையினர் வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
வடக்கு காசாவில் சுமார் 80,000 பாலஸ்தீனர்கள் உணவு, மருந்துப் பொருள்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலின் குண்டுவீச்சு மேலும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am
கலிபோர்னியா வேகமாக பரவும் காட்டுத் தீ: 300 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am