
செய்திகள் உலகம்
மூன்றில் ஒருவரால் கிட்டத்தட்ட அறவே படிக்கவோ எழுதவோ முடியவில்லை: நியூஸிலந்துப் பள்ளிகளில் கைதொலைபேசிகளுக்குத் தடை
வெலிங்டன்:
நியூஸிலந்து முழுவதும் பள்ளிகளில் கைதொலைபேசிகள் தடை செய்யப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon) தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க அது உதவும் என்று அவர் கூறினார்.
நியூஸிலந்தில் சரிந்து வரும் கல்வியறிவு விகிதத்தைக் கையாள லக்சனின் அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.
ஒரு காலத்தில் உலகின் சிறந்த கல்வியறிவு கொண்ட நாடுகளில் ஒன்றாக நியூஸிலந்து திகழ்ந்தது.
ஆனால் அங்கு தற்போது படிப்புத் திறனும் எழுத்துத் திறனும் பெரியளவு சரிந்துள்ளன.
அங்கு கல்வியறிவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகச் சென்ற ஆண்டு ஆய்வாளர்கள் சிலர் எச்சரித்தனர்.
15 வயதுப் பிள்ளைகளில் சுமார் மூன்றில் ஒருவரால் கிட்டத்தட்ட அறவே படிக்கவோ எழுதவோ முடியவில்லை என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm