
செய்திகள் உலகம்
வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்; பிரான்ஸ் பிரதமர் உத்தரவு
பாரிஸ்:
வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்று பிரான்ஸ் நாட்டு அமைச்சர்களுக்குப் பிரதமர் எலிசபெத் பொர்னே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்ட OLVID செயலியை அதிகளவில் பயன்படுத்துமாறு அவர் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
TELEGRAM, SIGNAL, WHATSAPP ஆகிய செயலிகளைப் பயன்படுத்துவதை தவிருங்கள் என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த செயலியை நம் நாட்டு அமைச்சர்களே அதிகளவில் பயன்படுத்துவதால் அது நாட்டு மக்களின் நம்பகத்தன்மைக்கு வித்திடும் என்று அவர் சொன்னார்.
நமது அன்றாட வாழ்வில் விரைவான குறுஞ்செய்தி வசதிகள் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நமது நாட்டின் தயாரிப்பு செயலியான OLVID செயலியை அனைத்து அரசாங்க துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm