
செய்திகள் உலகம்
வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்; பிரான்ஸ் பிரதமர் உத்தரவு
பாரிஸ்:
வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்று பிரான்ஸ் நாட்டு அமைச்சர்களுக்குப் பிரதமர் எலிசபெத் பொர்னே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்ட OLVID செயலியை அதிகளவில் பயன்படுத்துமாறு அவர் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
TELEGRAM, SIGNAL, WHATSAPP ஆகிய செயலிகளைப் பயன்படுத்துவதை தவிருங்கள் என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த செயலியை நம் நாட்டு அமைச்சர்களே அதிகளவில் பயன்படுத்துவதால் அது நாட்டு மக்களின் நம்பகத்தன்மைக்கு வித்திடும் என்று அவர் சொன்னார்.
நமது அன்றாட வாழ்வில் விரைவான குறுஞ்செய்தி வசதிகள் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நமது நாட்டின் தயாரிப்பு செயலியான OLVID செயலியை அனைத்து அரசாங்க துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm