செய்திகள் மலேசியா
பத்துமலை ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா: சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது
பத்துமலை:
பத்துமலை ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.
பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் மிகவும் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா வரும் நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.
இக்கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று தொடங்கியது.
இன்று காலை புனித வேள்வித் தீ எடுத்தல், யாகசாலை நின்மானம், விமான கலச ஸ்தாபன பூஜைகள் நடந்தது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தலைமையில் இப்பூஜைகள்நடைபெற்றது.

மாலையில் முதல் கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளது.நாளை காலை 9 மணி முதல் இரவு வரை பக்தர்கள் தங்கம், வெள்ளி வைக்கலாம். அதே வேளையில் நாளை மறுநாள் எண்ணெய் சாத்தும் வைபவமும் நடைபெறும்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும் கும்பாபிஷேக விழாவிலும் பகதர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு துர்க்கை அம்மனின் அருளை பெற்று செல்லுமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2025, 11:23 am
நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்: டத்தோஸ்ரீ சைபுடின்
November 18, 2025, 11:22 am
தேமுவை விட்டு மஇகா வெளியேறும் அந்த தருணம் வரும்; கவலைப்பட வேண்டாம்: டத்தோ அசோஜன்
November 18, 2025, 11:21 am
தேமுவை விட்டு வெளியேறுவதில் மஇகா சரியான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ தேவமணி
November 18, 2025, 11:20 am
தேமுவை விட்டு வெளியேறுவது தான் மஇகாவின் சிறந்த முடிவு; இழுபறி வேண்டாம்: கோகிலன் பிள்ளை
November 18, 2025, 11:19 am
கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் கட்சியின் தீபாவளி உபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
November 18, 2025, 9:53 am
தந்தையுடன் துபாயில் உள்ள தேவித்ராவின் குழந்தையை மீட்க போலிசார் தவறி விட்டனர்: வழக்கறிஞர் சாடல்
November 18, 2025, 9:37 am
நிலச்சரிவுகள் காரணமாக குவா மூசாங்-ஜெலி சாலை மூடப்பட்டது
November 17, 2025, 8:05 pm
