செய்திகள் மலேசியா
பத்துமலை ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா: சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது
பத்துமலை:
பத்துமலை ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.
பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் மிகவும் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா வரும் நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.
இக்கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று தொடங்கியது.
இன்று காலை புனித வேள்வித் தீ எடுத்தல், யாகசாலை நின்மானம், விமான கலச ஸ்தாபன பூஜைகள் நடந்தது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தலைமையில் இப்பூஜைகள்நடைபெற்றது.
மாலையில் முதல் கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளது.நாளை காலை 9 மணி முதல் இரவு வரை பக்தர்கள் தங்கம், வெள்ளி வைக்கலாம். அதே வேளையில் நாளை மறுநாள் எண்ணெய் சாத்தும் வைபவமும் நடைபெறும்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும் கும்பாபிஷேக விழாவிலும் பகதர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு துர்க்கை அம்மனின் அருளை பெற்று செல்லுமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 11:05 am
பத்தாண்டில் 1,600 போலிஸ் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கம்
July 27, 2024, 10:30 am
என்னையும் பிரதமரையும் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக உள்ளனர்: ஜாஹித்
July 26, 2024, 10:32 pm
நெங்கிரி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா களமிறங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 26, 2024, 9:47 pm
தங்கம், ஐபோன் விற்பனை மோசடி: குற்றச்சாட்டை 8 வார கர்ப்பிணியும் அவரின் நண்பரும் மறுத்தனர்
July 26, 2024, 4:47 pm
நூர் ஃபரா கர்த்தினி மரணம்: போலீஸ் விசாரணை மனநிறைவு அளிக்கின்றது: குடும்பத்தினர்
July 26, 2024, 4:40 pm
DAP மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்குப் பினாங்கு மாநிலத்தின் உயரிய விருது
July 26, 2024, 4:11 pm