
செய்திகள் மலேசியா
பத்துமலை ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா: சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது
பத்துமலை:
பத்துமலை ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.
பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் மிகவும் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா வரும் நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.
இக்கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று தொடங்கியது.
இன்று காலை புனித வேள்வித் தீ எடுத்தல், யாகசாலை நின்மானம், விமான கலச ஸ்தாபன பூஜைகள் நடந்தது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தலைமையில் இப்பூஜைகள்நடைபெற்றது.
மாலையில் முதல் கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளது.நாளை காலை 9 மணி முதல் இரவு வரை பக்தர்கள் தங்கம், வெள்ளி வைக்கலாம். அதே வேளையில் நாளை மறுநாள் எண்ணெய் சாத்தும் வைபவமும் நடைபெறும்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும் கும்பாபிஷேக விழாவிலும் பகதர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு துர்க்கை அம்மனின் அருளை பெற்று செல்லுமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 1:31 pm
ஜூருவில் நடந்த மனைவி, மகள் கொலை வழக்கில் விசாரணைக்கு உதவ கணவர் கைது: போலிஸ்
October 19, 2025, 1:26 pm
தீப ஒளி அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்: டான்ஸ்ரீ நடராஜா
October 19, 2025, 1:23 pm
நம்பிக்கை ஒளியான தீப ஒளி இந்திய சமூகத்தின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 19, 2025, 10:55 am
நிதி ஆற்றலை பொருத்து சிக்கனமாக, சீராக தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 19, 2025, 10:36 am
பெர்லிஸ் சுங்கத்துறையினர் RM1.06 மில்லியன் மதிப்புள்ள 32,000 கடத்தப்பட்ட மின்-சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்
October 18, 2025, 10:47 pm
கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட 2 பேர் மரணம்: 5 பேர் தப்பினர்
October 18, 2025, 10:45 pm
மாணவர்களின் இலக்கவியல் பாதுகாப்பிற்காக பள்ளிகளில் போலிசாரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆதரிக்கிறேன்: குணராஜ்
October 18, 2025, 4:26 pm