![image](https://imgs.nambikkai.com.my/IMG-20231113-WA0092.jpg)
செய்திகள் மலேசியா
பத்துகாஜாவில் 1000 பேருக்கு தீபாவளி உணவுக் கூடைகள்: மனிதவள அமைச்சர் சிவக்குமார் வழங்கினார்
ஈப்போ:
தித்திக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தனது பத்து காஜா நாடாளுமன்றத் தொகுதியில் ஆயிரம் பேருக்கு உணவுக் கூடைகளை வழங்கினார்.
மெங்கெலும்பு சட்டமன்ற தொகுதியில் 300 பேருக்கும் ஜெலாபாங் சட்டமன்ற தொகுதியில் 350 பேருக்கும் துரோனோ சட்டமன்றத் தொகுதியில் 350 பேருக்கும் இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது.
தீபாவளியை கொண்டாடி மகிழும் வசதி குறைந்த மக்களுக்கு இந்த உணவுக் கூடைகள் நேரடியாக வழங்கப்பட்டது.
உணவுக் கூடைகளை பெற்றுக் கொண்ட மக்கள் அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
பெருநாள் காலங்களில் பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு பல வகைகளில் அமைச்சர் சிவக்குமார் உதவிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இவ்வாண்டும் வசதி குறைந்த மக்களுக்கு அவர் பண்டிகைக்கால உதவிகளை வழங்கி இருக்கிறார்.
மனிதவள அமைச்சர் சிவக்குமாரின் அரசியல் செயலாளர் ஸ்டீவன் சாவ் மூலமாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைத்துள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 11:05 am
பத்தாண்டில் 1,600 போலிஸ் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கம்
July 27, 2024, 10:30 am
என்னையும் பிரதமரையும் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக உள்ளனர்: ஜாஹித்
July 26, 2024, 10:32 pm
நெங்கிரி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா களமிறங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 26, 2024, 9:47 pm
தங்கம், ஐபோன் விற்பனை மோசடி: குற்றச்சாட்டை 8 வார கர்ப்பிணியும் அவரின் நண்பரும் மறுத்தனர்
July 26, 2024, 4:47 pm
நூர் ஃபரா கர்த்தினி மரணம்: போலீஸ் விசாரணை மனநிறைவு அளிக்கின்றது: குடும்பத்தினர்
July 26, 2024, 4:40 pm
DAP மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்குப் பினாங்கு மாநிலத்தின் உயரிய விருது
July 26, 2024, 4:11 pm