செய்திகள் மலேசியா
பத்துகாஜாவில் 1000 பேருக்கு தீபாவளி உணவுக் கூடைகள்: மனிதவள அமைச்சர் சிவக்குமார் வழங்கினார்
ஈப்போ:
தித்திக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தனது பத்து காஜா நாடாளுமன்றத் தொகுதியில் ஆயிரம் பேருக்கு உணவுக் கூடைகளை வழங்கினார்.
மெங்கெலும்பு சட்டமன்ற தொகுதியில் 300 பேருக்கும் ஜெலாபாங் சட்டமன்ற தொகுதியில் 350 பேருக்கும் துரோனோ சட்டமன்றத் தொகுதியில் 350 பேருக்கும் இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது.
தீபாவளியை கொண்டாடி மகிழும் வசதி குறைந்த மக்களுக்கு இந்த உணவுக் கூடைகள் நேரடியாக வழங்கப்பட்டது.
உணவுக் கூடைகளை பெற்றுக் கொண்ட மக்கள் அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
பெருநாள் காலங்களில் பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு பல வகைகளில் அமைச்சர் சிவக்குமார் உதவிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இவ்வாண்டும் வசதி குறைந்த மக்களுக்கு அவர் பண்டிகைக்கால உதவிகளை வழங்கி இருக்கிறார்.
மனிதவள அமைச்சர் சிவக்குமாரின் அரசியல் செயலாளர் ஸ்டீவன் சாவ் மூலமாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைத்துள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 10:11 pm
பூடி 95 திட்டத்தில் மாற்றம் தற்காலிகமானது; மக்கள் புரிந்துகொள்வார்கள்: பிரதமர் நம்பிக்கை
March 26, 2026, 10:08 pm
பத்துமலையில் தேசிய ஆலய கருத்தரங்கு; டான்ஸ்ரீ நடராஜா தொடக்கி வைப்பார்: டத்தோ சிவக்குமார்
March 26, 2026, 10:04 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு தனியார் துறை முன்னுரிமை வழங்க வேண்டும்: பிரதமர் அன்வார்
March 26, 2026, 6:56 pm
பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் அளவு 200 லிட்டராக குறைக்கப்படும்: பிரதமர்
March 26, 2026, 5:52 pm
டீசல் விலை உயர்வு: 5,000 பேருந்து தொழிலதிபர்கள் பாதிப்பு
March 26, 2026, 5:35 pm
தென்கிழக்கு ஆசிய தொடக்கக் கற்றல் ஆய்வு; எழுத்துத் திறனில் மலேசியா முதலிடம்: கல்வியமைச்சு
March 26, 2026, 5:34 pm
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்யவில்லை: ஷாபி
March 26, 2026, 5:34 pm
சீபீல்டு ஆலயம் தொடர்பில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்: பாப்பாராயுடு
March 26, 2026, 5:02 pm
