செய்திகள் மலேசியா
பத்துகாஜாவில் 1000 பேருக்கு தீபாவளி உணவுக் கூடைகள்: மனிதவள அமைச்சர் சிவக்குமார் வழங்கினார்
ஈப்போ:
தித்திக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தனது பத்து காஜா நாடாளுமன்றத் தொகுதியில் ஆயிரம் பேருக்கு உணவுக் கூடைகளை வழங்கினார்.
மெங்கெலும்பு சட்டமன்ற தொகுதியில் 300 பேருக்கும் ஜெலாபாங் சட்டமன்ற தொகுதியில் 350 பேருக்கும் துரோனோ சட்டமன்றத் தொகுதியில் 350 பேருக்கும் இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது.
தீபாவளியை கொண்டாடி மகிழும் வசதி குறைந்த மக்களுக்கு இந்த உணவுக் கூடைகள் நேரடியாக வழங்கப்பட்டது.
உணவுக் கூடைகளை பெற்றுக் கொண்ட மக்கள் அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
பெருநாள் காலங்களில் பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு பல வகைகளில் அமைச்சர் சிவக்குமார் உதவிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இவ்வாண்டும் வசதி குறைந்த மக்களுக்கு அவர் பண்டிகைக்கால உதவிகளை வழங்கி இருக்கிறார்.
மனிதவள அமைச்சர் சிவக்குமாரின் அரசியல் செயலாளர் ஸ்டீவன் சாவ் மூலமாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைத்துள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
பொது இடத்தில் குப்பை வீசிய நால்வர் நீதிமன்ற உத்தரவால் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்
February 13, 2026, 12:30 pm
சிபுவில் எட்டு கடைகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்தது
February 13, 2026, 12:25 pm
