நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிபுவில் எட்டு கடைகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்தது

கூச்சிங்: 

இன்று அதிகாலை சிபு பகுதியில் உள்ள சுங்கை மேரா, ஜாலான் பஹ்லாவான் சாலையில் அமைந்திருந்த கடைகளின் வரிசை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

சரவாக் மாநிலத்தின் தீயணைப்பு, மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையம் (PGO), இந்தச் சம்பவம் குறித்து அதிகாலை 2.46 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

 அதன் பின்னர், சுங்கை மேரா தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு உடனடியாக சம்பவ இடத்தைக் காலை 2.52 மணிக்கு அடைந்ததாக PGO-வின் பேச்சாளர் கூறினார்.

“போலீசாருடன் இணைந்து மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில், எட்டு கடைகள் கொண்ட ஒரு முழு வரிசை கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த இடத்தில் யாராவது சிக்கிக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக உடனடியாக மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் எந்த நபரும் கடைகளுக்குள் இல்லை என்பதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களைப் போலீசார் தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார்.

முழுமையானச் சோதனைக்குப் பின் இந்தச் சம்பவத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும், சம்பவ இடம் தற்போது பாதுகாப்பாகவும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டது.

“அதிகாலை 3.50 மணிக்கு மீட்பு நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்தது. சம்பவத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேத மதிப்பீடு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset