நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுக் கழிப்பறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டப் பச்சிளம் குழந்தை

மலாக்கா:

இன்று காலை, மலாக்காவில் உள்ள 'Taman Bandaraya Bukit Serindit' பொதுக் கழிப்பறையில், பெண் குழந்தை ஒன்று 'telekung' எனப்படும் தொழுகைத் துணியால் மூடப்பட்டு, ஒரு பையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது.

 அந்தக் குழந்தையின் தொப்புள் கொடி இன்னும் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9.40 மணியளவில், அந்தக் கழிப்பறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த பணியாளர் ஒருவர் குழந்தையைக் கவனித்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

காலை 10.40 மணி நிலவரப்படி, டூயோங் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ முஹம்மத் நூர் ஹெல்மி அப்துல் ஹலேம் உட்பட பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டிருந்தனர். 

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset