செய்திகள் உலகம்
‘டிரை ஐஸ்’ கரியமில வாயுவை நுகர்ந்த நால்வர் மரணம்
தோக்கியோ:
ஜப்பானில் சவப்பெட்டிகளில் உடல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் உலர்ந்த ஐஸ்ஸிலிருந்து (டிரை ஐஸ்) வெளியான கரியமில வாயுவை நுகர்ந்ததில் நால்வர் மரணமடைந்தனர்.
இறந்த நால்வரும் 40லிருந்து 70 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இவ்வாறு மாண்டவர்கள், தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்கள் இருந்த சவப்பெட்டிகளுக்கு மிக அருகே அதிக நேரம் நின்றதாக ஜப்பானின் யோமுரி ஷிம்புன் நாளிதழ் தெரிவித்தது.
அவோமி, ஒக்கினாவா நகரங்களிலுள்ள வீடுகள், மியாகி, மியாஸாக்கி நகரங்களிலிருக்கும் இறுதிச் சடங்கு நிலையங்கள் ஆகியவற்றில் 2018=ஆம் ஆண்டிலிருந்து 2021-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடங்கள் மேலும் காற்றோட்ட நிலையில் இருப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்று தலைநகர் தோக்கியோவில் இயங்கும் அகில ஜப்பானிய இறுதிச் சடங்கு இயக்குநர்கள் ஒத்துழைப்பு (ஸென்சொரன்) உள்ளிட்ட அமைப்புகள் வியாழக்கிழமையன்று குரல் கொடுத்தன.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 12:45 pm
விளையாட்டு வினையானது: விமானத்தில் வெடிகுண்டு வதந்தி பரப்பிய பயணி கைது
April 28, 2026, 11:50 am
இந்தோனேசியாவில் ரயில் விபத்து: 7 பேர் மரணம்
April 27, 2026, 5:36 pm
தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: சமூக வலைதள வதந்திகளால் யாத்ரீகர்களிடையே குழப்பம்
April 27, 2026, 3:20 pm
5 ஆண்டுகளாக அறையில் பூட்டி வைக்கப்பட்ட 191 சடலங்கள்; தம்பதிக்கு 60 ஆண்டுகள் சிறை
April 27, 2026, 12:12 pm
இந்தியானா பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயம்
April 27, 2026, 12:12 pm
10 மில்லியன் டாலர் இணைய மோசடி: இந்தோனேசிய நபர் தாய்லாந்தில் கைது
April 27, 2026, 10:55 am
அழுத்தம் கொடுத்துக் கொண்டே பேச்சுவார்த்தையா?: அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் கேள்வி
April 27, 2026, 10:36 am
எரிசக்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: வணிக நேரக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்
April 26, 2026, 11:43 am
10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: இலங்கை விமான நிலையத்தில் சிக்கிய பௌத்த துறவிகள்
April 26, 2026, 10:47 am
