செய்திகள் மலேசியா
இந்து சமயப் பிரச்சினைகளுக்கு மக்களின் ஆதரவு போதவில்லை: டத்தோ சிவக்குமார்
கோலாலம்பூர் :
இந்து சமயப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்க மக்களின் ஆதரவு போதவில்லை என்று மஹிமாவின் உதவி தலைவர் டத்தோ சிவக்குமார் நடராஜா கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தைப் பற்றி பேசி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு இந்தியாவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அதே வேளையில் உலகின் பல நாடுகளில் வாழும் இந்து மக்கள் இப்பிரச்சினைக்குக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மலேசியாவில் உள்ள 28 இந்து இயக்கங்கள் ஒன்றிணைந்து இங்குள்ள இந்திய தூதரகத்தில் மகஜர் வழங்கினர்.
மஹிமா சார்பில் அதன் துணைத் தலைவர் செல்வம் மூக்கையா, உதவித் தலைவரான நானும் கலந்து கொண்டேன்.
அனைத்து இயக்கங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்தனர். ஆனால் மக்களிடமிருந்து பெரிய ஆதரவு இல்லை.
ஒரு பிரச்சினை என்றால் சமூக வலைத் தளங்களில் தான் அதிகமாகப் பேசுகிறார்கள்.
ஆனால் நேரடியாக வந்து ஆதரவு தருவது இல்லை. இந்நிலை மாற வேண்டும்.
இந்து சமயத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அனைவரும் ஒன்றாகக் கைகோர்க்க வேண்டும்.
இதற்கு டான்ஸ்ரீ நடராஜா தலைமையிலான மஹிமா என்றும் துணை நிற்கும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2026, 8:17 pm
அரச மன்னிப்பு அதிகாரம் என்பது அரசியல் பரிசு அல்லது தனிப்பட்ட அனுதாபம் அல்ல: பகாங் சுல்தான்
February 3, 2026, 8:08 pm
பயணியிடம் பாலியல் தொல்லை புரிந்த ஈ ஹெய்லிங் ஓட்டுநரின் உரிமம் உடனடியாக ரத்து: அந்தோனி லோக்
February 3, 2026, 6:03 pm
தாயைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர், சிலாங்கூர் மாநிலத்திற்குச் செல்லும் பேருந்தில் கைது
February 3, 2026, 5:55 pm
முன்னாள் காதலியின் மீது கோபம்: பெட்ரோல் ஊற்றி, வீட்டில் தீ வைத்து தாக்கிய நபர் கைது
February 3, 2026, 3:24 pm
நகராட்சி தேர்தல் அச்சுறுத்தல் அல்ல, மக்களின் அதிகாரம்: அம்னோ இளைஞர் பிரிவின் எதிர்ப்புக்கு டாப்ஸி பதில்
February 3, 2026, 2:54 pm
மத சகிப்புத்தன்மை, வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு ஆகியவை நல்லிணக்கத்தின் அடிப்படையாகும்: ஜாஹித் ஹமிடி
February 3, 2026, 11:14 am
வடிகால் குழியில் விழுந்து மாணவன் மாண்டார்: இரு சகோதரர்களின் பயணம் சோகமாக முடிந்தது
February 2, 2026, 2:17 pm
