 
 செய்திகள் மலேசியா
இந்து சமயப் பிரச்சினைகளுக்கு மக்களின் ஆதரவு போதவில்லை: டத்தோ சிவக்குமார்
கோலாலம்பூர் :
இந்து சமயப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்க மக்களின் ஆதரவு போதவில்லை என்று மஹிமாவின் உதவி தலைவர் டத்தோ சிவக்குமார் நடராஜா கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தைப் பற்றி பேசி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு இந்தியாவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அதே வேளையில் உலகின் பல நாடுகளில் வாழும் இந்து மக்கள் இப்பிரச்சினைக்குக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மலேசியாவில் உள்ள 28 இந்து இயக்கங்கள் ஒன்றிணைந்து இங்குள்ள இந்திய தூதரகத்தில் மகஜர் வழங்கினர்.
மஹிமா சார்பில் அதன் துணைத் தலைவர் செல்வம் மூக்கையா, உதவித் தலைவரான நானும் கலந்து கொண்டேன்.
அனைத்து இயக்கங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்தனர். ஆனால் மக்களிடமிருந்து பெரிய ஆதரவு இல்லை.
ஒரு பிரச்சினை என்றால் சமூக வலைத் தளங்களில் தான் அதிகமாகப் பேசுகிறார்கள்.
ஆனால் நேரடியாக வந்து ஆதரவு தருவது இல்லை. இந்நிலை மாற வேண்டும்.
இந்து சமயத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அனைவரும் ஒன்றாகக் கைகோர்க்க வேண்டும்.
இதற்கு டான்ஸ்ரீ நடராஜா தலைமையிலான மஹிமா என்றும் துணை நிற்கும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 2:54 pm
நஜிப் குற்றவாளியா அல்லது விடுதலை செய்யப்படுவாரா?: டிசம்பர் 26ஆம் தேதி தீர்ப்பு
October 31, 2025, 2:53 pm
ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை பெற மொஹைதின் என்னை சந்திக்கவில்லை: துன் மகாதீர்
October 31, 2025, 2:52 pm
உலகளாவிய வடக்கு, தெற்கு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை ஏபெக் குறைக்க வேண்டும்: பிரதமர்
October 31, 2025, 2:50 pm
கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண் மரணம்: முன்னாள் காதலன், வளர்ப்பு சகோதரர் உட்பட 3 பேர் கைது
October 31, 2025, 2:10 pm
ஜெய்ன் ராயன் தாயார் இஸ்மானிராவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை: தண்டனையை உடனடியாகத் தொடங்க நீதிபதி உத்தரவு
October 31, 2025, 6:58 am
6ஆவது தலைமுறையினருக்கு ஓஐசி அட்டை நீட்டிக்கப்பட்டுள்ளது: இந்திய தூதரகம் அறிவிப்பு
October 30, 2025, 10:04 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 