நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சுமிதோமோ மிட்சூய் நிறுவனத்திடமிருந்து 400 மில்லியன் ரிங்கிட் கடனை பெற்றது அஸ்ட்ரோ

கோலாலம்பூர்:

சுமிதோமோ மிட்சூய் நிறுவனத்திடமிருந்து 400 மில்லியன் ரிங்கிட் கடனை அஸ்ட்ரோ பெற்றுள்ளது.

அஸ்ட்ரோ மலேசியாவின் துணை நிறுவனமான மியாசாட் பிராட்காஸ்ட் நெட்வொர்க் நிறுவனம் இந்த கடனை பெற்றள்ளது.

வட்டியில்லாமல் இந்த கடனை அஸ்ட்ரோ பெற்றுள்ளது.

கடன் திரும்பப் பெறுதல் ஒப்பந்தத்தின் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் செய்யப்பட வேண்டும்.

அதன் பிறகு கூடுதல் திரும்பப் பெற முடியும்.

முதல் பணம் வழங்கப்பட்ட நாளிலிருந்து நான்கு ஆண்டுகள் முடிவடைவதற்குள் அல்லது அதற்கு முன் இந்த வசதி முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும். 

புரூசா மலேசியாவுக்கு வழங்கிய ஓர் அறிக்கையில் அஸ்ட்ரோ மேற்கண்டவாறு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset