நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மினிமம் பாலன்ஸ் இல்லாததால் அபராதமாக ரூ.21,000 கோடி வசூல்

புது டெல்லி:

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எனப்படும் மினிமம் பாலன்ஸ் இல்லாததால் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.21,000 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலித்துள்ள அபராத தொகை தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.

அதில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஐடிபிஐ, ஆக்சிஸ், இந்தஸ்இந்த் ஆகிய தனியார் வங்கிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் வசூலித்த தொகையின் விவரங்களை வெளியிட்டார்.

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புதொகை  வைக்காததற்காக அபராதமாக ரூ.21000 கோடி வசூலிக்கப்பட்டதாக கூறி உள்ளார்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஏடிஎம் எந்திரத்தை பயன்படுத்தியதற்காக ரூ.8000 கோடி, எஸ்எம்எஸ் சேவைக்காக ரூ.6000 கோடி என வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பெருநகரங்களில் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரையிலும், நகர்ப்புறங்களில் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையிலும், கிராமப்புறங்களில் ரூ.500 முதல் ரூ.1,000 வரையிலும் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என பெரும்பாலான வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன.

இந்த இருப்புத் தொகையை பராமரிக்காததால் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையில் அபராத கட்டணங்கள் விதிக்கப்படுகிறது

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset