செய்திகள் வணிகம்
அரிசி ஏற்றுமதிக்கு இந்திய தடையால் பாகிஸ்தான் மகிழ்ச்சி
கராச்சி:
பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்ததால், சர்வதேச அளவில் பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உள்நாட்டில் அரிசி விநியோகத்தை அதிகரிக்கவும், சில்லறை விற்பனையில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கவும் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா கடந்த மாதம் 20ம் தேதி தடைவிதித்தது.
இது சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரிசி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான முன்பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறுகையில், இந்தியா தடை விதிப்பதற்கு முன்பு, அரிசி ஒரு டன் 450 டாலருக்கு பாகிஸ்தானிலிருந்து ஏற்றுமதியானது. தற்போது, 500 டாலராக உயர்ந்துள்ளது. அரிசியின் தரத்தைப் பொருத்து வரும் நாள்களில் இந்த விலை 600 டாலரையும் நெருங்கலாம்.
அமெரிக்கா, பிரிட்டன், பிற ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, ரஷியாவும் பாகிஸ்தானிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am