செய்திகள் வணிகம்
இன்று காலை முதல் ரிங்கிட்டின் மதிப்பு அதிகரித்து வருகின்றது
கோலாலம்பூர்:
ஜூன் 2023-ஆம் ஆண்டுக்கான அமெரிக்க நுகர்வோர் விலைக் குறியீட்டு (சிபிஐ) தரவு எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருப்பதால் அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு இன்று காலை முதல் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
காலை 9 மணிக்கு, உள்ளூர் நாணயம் புதன்கிழமை முடிவில் 4.6500/6535 இலிருந்து அமெரிக்க டாலருக்கு எதிராக 310 சதவீத புள்ளிகள் உயர்ந்து 4.6190/6230 ஆக இருந்தது.
US CPI மே 20-ஆம் தேதியிலிருந்து நான்கு சதவீதத்திலிருந்து ஜூன் மாதத்தில் மூன்று சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது சந்தை எதிர்பார்ப்புகளான 3.1 சதவீதத்தை விட சற்றுக் குறைவாக உள்ளது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிரான ரிங்கிட் புதன்கிழமை மாலை வர்த்தகம் 3.4753/4782 இலிருந்து 3.4727/4762 ஆக வலுவடைந்தது.
அதேவேளையில், இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராக 308.4/308.8 இல் இருந்து 306.3/306.8 ஆக உயர்ந்தது.
இருப்பினும், உள்ளூர் நாணயம் தாய் பாட்டுக்கு எதிராக 13.3173/3338 இலிருந்து 13.3243/3420 ஆக இருக்கிறது.
பிலிப்பைன்ஸ் பேசோவிற்கு எதிராக 8.46/8.47 இல் மாறாமல் இருந்தது.
இந்திய ரூபாய்க்கு எதிராக ரிங்கிட் மதிப்பு வலுவிழந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி ரூபாய் 17.77 ஆக இருந்தது.
- அஷ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am