
செய்திகள் மலேசியா
ஆன்மா விழிக்கிறது - தியாகத் திருநாள் கவிதை
கஅபா காட்டும் விந்தை-நாளும்
கனவில் வருகிறது!
கஅபா வலத்தின் மேன்மை-கண்ட
கால்கள் தவிக்கிறது!
கண்ணில் கண்ட காட்சி-என்றன்
கல்பில் நிறைகிறது!
என்னே இறைவன் மாட்சி-அங்கே
இதயம் விழைகிறது!
உலகோர் ஒன்றாய்க் கூடும்-அந்த
உணர்வோ படர்கிறது!
பலவாம் இனங்கள் ஆயின்-உறவுப்
பாலம் விரிகிறது!
சஃபா மர்வா ஓட்டம்-அந்தச்
சரிதம் உயர்கிறது!
எவ்வும் ஜம்ஜம் ஊற்றில்-குறையா
இறைமை பொழிகிறது!
நீந்தும் விழிகள் நீரில்-அரஃபா
நினைவோ துளிர்கிறது!
சாந்தி நபிகள் வாழும்-மதினா
சலவாத் ஒலிக்கிறது!
ஹஜ்ஜின் தியாகத் தூண்கள்-நபிமார்
அர்ப்பணம் ஒளிர்கிறது!-
ஹஜ்ஜுப் பெருநாள் பூக்க-தூய
ஆன்மா விழிக்கிறது!
தொற்றால் கூட்டம் குறைந்தும்-ஹஜ்ஜின்
சுகந்தம் தொடர்கிறது!
வற்றா இறையின் அருளை-வேண்டி
வையம் பணிகிறது!
வெள்ளை மலர்களின் வெள்ளம்-பெருக
வல்லோன் அருள்புரிவாய்!
தொல்லை புரியும் குரோனா-நோயைத்
துடைத்தே ஒழித்திடுவாய்!
- கவிஞர் பெருங்குளம் ஹாஜா,
லூனாஸ், மலேசியா
உலக முஸ்லிம்கள் அனைவருக்கும்
தியாகத் திருநாள் வாழ்த்துகள்!
தொடர்புடைய செய்திகள்
June 8, 2025, 2:16 pm
ஐயா செ. சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்ட உருவாக்கத் திருப்பணி அறிமுக விழா
June 8, 2025, 1:30 pm
ஃபஹ்மி ரேசாவின் பயணத் தடை குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
June 8, 2025, 12:33 pm
காஸாவின் அமைதிக்கு ஆசியான், வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு தேவை: பிரதமர்
June 8, 2025, 12:01 pm
படகு கவிழ்ந்த சம்பவத்தில் மரணமடைந்த கணவன் - மனைவியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன
June 8, 2025, 11:57 am
லுமுட்டில் குர்பான் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆடவர் மரணம்
June 8, 2025, 11:46 am
தியோ பெங் ஹாக் வழக்கில் குற்றச்சாட்டுகளைத் தொடருமாறு சட்டத்துறை தலைவருக்கு ஜசெக வலியுறுத்து
June 8, 2025, 11:39 am