நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆன்மா விழிக்கிறது - தியாகத் திருநாள் கவிதை

கஅபா காட்டும் விந்தை-நாளும்

கனவில் வருகிறது!

கஅபா வலத்தின் மேன்மை-கண்ட

கால்கள் தவிக்கிறது!

கண்ணில் கண்ட காட்சி-என்றன்

கல்பில் நிறைகிறது!

 

என்னே இறைவன் மாட்சி-அங்கே

இதயம் விழைகிறது!

உலகோர் ஒன்றாய்க் கூடும்-அந்த

உணர்வோ படர்கிறது!

பலவாம் இனங்கள் ஆயின்-உறவுப்

பாலம்  விரிகிறது!

 

சஃபா மர்வா ஓட்டம்-அந்தச்

சரிதம் உயர்கிறது!

எவ்வும் ஜம்ஜம் ஊற்றில்-குறையா

இறைமை பொழிகிறது!

நீந்தும் விழிகள் நீரில்-அரஃபா

நினைவோ துளிர்கிறது!

சாந்தி நபிகள் வாழும்-மதினா

சலவாத் ஒலிக்கிறது!

 

ஹஜ்ஜின் தியாகத் தூண்கள்-நபிமார்

அர்ப்பணம் ஒளிர்கிறது!-

ஹஜ்ஜுப் பெருநாள் பூக்க-தூய

ஆன்மா விழிக்கிறது!

தொற்றால் கூட்டம் குறைந்தும்-ஹஜ்ஜின்

சுகந்தம்  தொடர்கிறது!

வற்றா இறையின் அருளை-வேண்டி

வையம் பணிகிறது!

 

வெள்ளை மலர்களின் வெள்ளம்-பெருக

வல்லோன் அருள்புரிவாய்!

தொல்லை புரியும் குரோனா-நோயைத்

துடைத்தே ஒழித்திடுவாய்!

- கவிஞர் பெருங்குளம் ஹாஜா,

லூனாஸ், மலேசியா

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும்
தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset