நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

500 ஏர்பஸ் விமானங்களை வாங்குகிறது இண்டிகோ

மும்பை:

ஏர்பஸ் விமான நிறுவனத்திடம் இருந்து 500 விமானங்களை  இண்டிகோ நிறுவனம் வாங்க உள்ளது.

ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து அதிக எண்ணிக்கையில் விமானங்களை வாங்குவது இதுவே முதல்முறையாகும். டாடா குழுமத்தின் ஏர்-இந்தியா விமான சேவை நிறுவனம் போயிங், ஏர்பஸ் நிறுவனங்களிடம் இருந்து 470 விமானங்களை வாங்க கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டதே மிக அதிகமாக இருந்தது.

இப்போது இண்டிகோ விமான நிறுவனத்திடம் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளன. பல்வேறு கட்டங்களாக 480 விமானங்களை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அவை தயாரிப்பில் உள்ளன.

இந்நிலையில் 2030 முதல் 2035 வரையிலான காலகட்டத்தில் 500 விமானங்களை வாங்க உள்ளது. இதன் மதி்ப்பு சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பா்க்கப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset