செய்திகள் வணிகம்
பில்கேட்ஸ் - ஷி ஜின்பிங் சந்திப்பு
பெய்ஜிஹ்:
சீனாவும் அமெரிக்காவும் இருநாட்டு நலன் கருதி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸுடனான சந்திப்பில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறினார்.
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் சீனாவுக்கு இன்று வருகை தரவுநிலையில், சீனஅதிபரின் இக் கருத்து சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க சீனா முயற்சி செய்து வருகிறது. இதற்காக உலக முதலீட்டாளர்களை சீனாவுக்கு வரவைக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் கடந்த மார்ச் மாதத்தில் சீனாவுக்கு வந்தார்.
இந்நிலையில், பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து சீன தொலைக்காட்சிக்கு அதிபர் ஜின்பிங் அளித்த பேட்டியில், கொரோனா காரணமாக 3 ஆண்டுகள் கழித்து பழைய நண்பரை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சீன-அமெரிக்க உறவின் அடித்தளம் மக்களைச் சார்ந்து உள்ளது. தற்போதைய உலகச் சூழலில் இரு நாடு, இரு நாட்டு மக்கள் மற்றும் மொத்த மனித இனத்தின் நலனுக்காக பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளலாம் என பில் கேட்ஸிடம் தெரிவித்தேன் என்றார்.
அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என சந்திப்பு குறித்து பில் கேட்ஸ் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am