
செய்திகள் உலகம்
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கு நாட்டின் உயரிய விருது
வெலிங்டன் :
நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் 2017-ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார். இவர் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றார்.
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியிலிருருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்தார். இது நியூசிலாந்து மக்கள் மற்றும் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் 2-ஆவது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்தக் கவுரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை ஏற்றுக்கொள்வது பற்றி நான் இரண்டு மனதாக இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தேசமாக நாம் கடந்து வந்த பல விஷயங்கள் ஒரு தனிநபரைவிட நம் அனைவரையும் பற்றியதாகும்.
இது எனது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது வாழ்க்கையின் மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் பாத்திரத்தை ஏற்க என்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கும் என்று ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 23, 2023, 4:34 pm
‘டிரை ஐஸ்’ கரியமில வாயுவை நுகர்ந்த நால்வர் மரணம்
September 23, 2023, 1:48 pm
இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு விரைவில் தடை : பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை
September 22, 2023, 4:22 pm
பிஸ்மில்லாஹ் கூறி பன்றிக்கறி சாப்பிட்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை
September 22, 2023, 4:17 pm
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை: ரஷ்யா அறிவிப்பு
September 22, 2023, 1:38 pm
கனடாவில் மற்றொரு சீக்கியர் கொலை
September 21, 2023, 10:40 am
ஈஸ்வரனின் எம்.பி பதவி ரத்து மசோதா; சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தோல்வி
September 20, 2023, 6:15 pm
இந்தியா நிலவுக்கு சென்றுவிட்டது, பாகிஸ்தான் பணத்துக்கு கையேந்துகிறது: நவாஸ் ஷெரீஃப்
September 20, 2023, 5:46 pm
மேற்கத்திய நாடுகளை எதிர்கொள்ள மேலும் நெருக்கம் தேவை: சீனாவிடம் ரஷியா வேண்டுகோள்
September 20, 2023, 3:43 pm
கனடாவின் நடவடிக்கைகள் பிரிட்டன் - இந்தியா வர்த்தக பேச்சை பாதிக்குமா?
September 20, 2023, 3:29 pm