நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு மாநிலத்தில்  13 வட்டி முதலைகள் கைது

ஜார்ஜ்டவுன்: 

பினாங்கு மாநிலத்தில் 13 வட்டி முதலைகளைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்று மாநில போலீஸ்படைத் தலைவர் காவ் கோக் சின் கூறினார்.

பினாங்கு மாநிலத்தில் அதிகரித்து வரும் வட்டி முதலைகள் நடவடிக்கைகளை ஒழிக்க போலீஸ்படை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கிட்டத்தட்ட 112 போலீஸ் அதிகாரிகள் 28 பிரிவுகளாக பிரிந்து சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இந்த சோதனைகளின் வாயிலாக 13 வட்டி முதலைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset