நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் ஸ்ரீ சிவன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

சிங்கப்பூர் ஸ்ரீ சிவன் ஆலயமகா கும்பாபிஷேகம் பக்தர்கள் புடைசூழ மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

சிங்கப்பூர் ஸ்ரீ சிவன் ஆலய நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர்,  மஹிமா தலைவர் என்ற முறையில் இந்த மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டேன்.

இந்த மகத்தான ஆன்மீக நிகழ்வு தெய்வீக சக்தி, பக்தியால் நிரம்பியது.

இது ஆலயத்திற்கும் அதன் பக்தர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.

இந்த புனிதமான கொண்டாட்டத்தைக் காணவும், எல்லாம் வல்லவரின் ஆசீர்வாதங்களைப் பெறவும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த புனிதமான கும்பாபிஷேகம் அனைவருக்கும் நீடித்த அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டு வரட்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset